Porakkum Podhu

Porakkum Podhu Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஜி ராமநாதன்

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம் காண்பதற்கு உருப்படியாய் இருப்பதையும் கெடுப்பதுவே குரங்கு குணம்

ஆற்றில் இறங்குவோரை கொன்று இரையாக்கல் முதலை குணம் – ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா

பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது

எல்லாம் இருக்கும்போது பிரிந்த குணம் இறக்கும்போது சேருது எல்லாம் இருக்கும்போது பிரிந்த குணம் இறக்கும்போது சேருது

மனிதன் பொறக்கும்போது மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது

பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து திருடன் என்றே உதைக்குது ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து திருடன் என்றே உதைக்குது


மனிதன் பொறக்கும்போது மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது

காலநிலையை மறந்து சிலது கம்பையும் கொம்பையும் நீட்டுது காலநிலையை மறந்து சிலது கம்பையும் கொம்பையும் நீட்டுது

புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும் வாலை பிடிச்சி ஆட்டுது புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும் வாலை பிடிச்சி ஆட்டுது

வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு காசை தேடி பூட்டுது வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு காசை தேடி பூட்டுது ஆனால் காதோரம் நரச்ச முடி கதை முடிவை காட்டுது ஆனால் காதோரம் நரச்ச முடி கதை முடிவை காட்டுது

மனிதன் பொறக்கும்போது மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம் ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை

உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் நம்பி ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் நம்பி ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் –

நாம் உளறி என்ன கதறி என்ன ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா நாம் உளறி என்ன கதறி என்ன ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா